Ads (728x90)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் டுபாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர். 

ஐக்கிய அரபு இராச்சிய வெளிநாட்டு வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல் செய்யூத் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. 

இந்த வரவேற்பு நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சிய பதில் தூதுவர் தக்ஷிலா ஆர்னோல்டா, டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸிற்கான இலங்கை கொன்சூலர் ஜெனரல் அலெக்ஸி குணசேகர உள்ளிட்ட டுபாயில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget