Ads (728x90)

படலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். 

ஆணைக்குழுவின் அறிக்கையை இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியும், அமைச்சரவையும் இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பான மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகஅமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget