இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுப் பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலையின் பைன் மரக்காட்டு பகுதியிலிருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் இறங்கி வந்தனர். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள் என்று கூறப்படுகின்றது. 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது.
Post a Comment