காவல்துறை அதிகாரி அர்ஜுன் சர்க்கார் (நானி) கைது செய்யப்படுவதில் தொடங்கும் திரைப்படத்தில், சிறையில் இருக்கும்போது கதை சொல்வதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி-யாக இருக்கும் அர்ஜுன், அடுத்தடுத்து இரண்டு பேரைக் கொலை செய்கிறார். அவர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, தலையைத் துண்டித்து கொல்கிறார். இதற்கு ஒரு பின்னணி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் காவல்துறை புலனாய்வு அதிகாரியாகப் பணிபுரியும் ஹீரோ நானி, கொலைக் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அமர்த்தப்படுகிறார். விசாரணையில் திடுக்கிடும் மர்மங்கள் வெளியாகின்றன. ஒரே பாணியில் இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் பலர் கொல்லப்பட்டதும் தெரிய வருகிறது.
அப்பாவி மக்களைக் கொலை செய்வதற்கான காரணம் என்ன? கொலையாளி யார்? கொலை செய்தவர்களை காவல்துறை அதிகாரி தண்டித்தாரா? இதுதான் ஹிட் 3 படத்தின் கதை.
உண்மையில், கதை என்று குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமே இல்லை என்றே சொல்லலாம். ஹீரோவின் வேலை, தொடர்ந்து சண்டையிடுவதும், கொல்வதும் தானா என்று தோன்றுகிறது.
மொத்தத்தில், இதுவொரு வழக்கமான படம் இல்லை. அதிரடி வன்முறை படம். தந்தை, மகன் சம்பந்தப்பட்ட இரண்டு காட்சிகள் உள்ளன. கதாநாயகி, காதல் மற்றும் நல்ல பாடல்கள் இருந்தாலும், அவை கதையுடன் ஒன்றாமல் கவனத்தைச் சிதறடிக்கின்றன.
Post a Comment