Ads (728x90)

தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அழைக்கப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணத்தின் வாகன விற்பனை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தவறான தகவல்களைக் கூறினார். பின்னர் வடமத்திய மாகாண ஆளுநர் சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியபோது அவர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார். 

இவரின் செயல் ஒரு கொத்து வாழைப்பழங்களைத் திருடி, அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு உரிமையாளரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்பது போன்றது என தெரிவித்த நீதி அமைச்சர், தயாசிறி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கொள்கலன்களை அகற்றுவது தொடர்பாக கம்மன்பிலவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விரைவில் சிஐடியால் அவர் அழைக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget