Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மதுபான உரிமங்களை வழங்கல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் என்ற முறையில் கலால் கட்டளைச் சட்டத்தை மீறி மதுபான உரிமங்களை வழங்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மாத்தளையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உள்ளிட்ட குழுவினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் முன்னாள் கலால் ஆணையர் எம்.ஜே. குணசிறி ஆகியோர் மனுக்களில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடைபெறும் வரை வழங்கப்பட்ட மதுபான உரிமங்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டு முழுவதும் வழங்கப்பட்ட மதுபான உரிமங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கலால் ஆணையருக்கு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மனுக்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர், யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget