Ads (728x90)

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர்.

இதன்பிரகாரம் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர், உடனடியாக பணிப்புரை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். பதில் பாடசாலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget