Ads (728x90)

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார். 

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

ஆசியாவின் பெரும் நூலகமான யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டது. இனங்களுக்கு இடையில் கலவரங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களை கொன்றொழித்தது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்தது. பட்டலாந்த சித்திரவதை முகாம்களில் இளைஞர்களை கடுமையாக சித்திரவதை புரிந்து அவர்களை படுகொலை செய்தது. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகளை கொழும்பு 04 ஆம் மாடியில் சித்திரவதை புரிந்து படுகொலை செய்ய உறுதுணையாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அவர் எப்போதோ கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டியவர். 

இப்போது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படும். அத்துடன் ஏனைய குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

இப்படிபட்ட நபரை பாதுகாக்கும் விதத்தில் கருத்து வெளியிடுவது கவலையளிக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க மட்டும் அல்ல எப்படியான நபரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டே செயற்படவேண்டும். இது விடயத்தில் எவருக்கும் விதி விலக்கு கிடையாது. இந்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். பலம் பொருந்தியவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது என்றார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget