Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகள் அமைப்பு இன்று விசேட ஊடக சந்திப்பில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே இந்த உத்தரவை விமர்சிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்புக்கு சமமாகிவிடும் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

மேலதிகமாக இது போன்ற அறிக்கைகள் பொதுமக்களிடையே அமையின்மையை ஏற்படுத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்படாமல் இருப்பதற்கு அது ஒரு காரணமாக அமையலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget