Ads (728x90)

மஹிந்த ராஜபக்சவின் 2010 ஆட்சிக் காலத்திலேயே கடுமையான ஊழல்கள் இடம்பெற்றதாக குறிப்பிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

அடுத்தடுத்து வந்த இலங்கைத் தலைவர்களுக்கும் தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமது மற்றும் ருவாண்டாவின் ஜெனரல் ஜுவெனல் போன்ற சர்வதேச தலைவர்கள், ஊழலுக்கு எதிராக வலுவான நிலைப்பாடுகளை எடுத்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

ராஜபக்ஷவின் தலைமையில் சீனாவுக்கு 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரச முறை பயணத்தின் போது 65 பேர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அதிகாரபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சரத் பொன்சேகா சுட்டிக் காட்டியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளையும் விமர்சித்த சரத் பொன்சேகா, அதிகாரிகளைப் பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய நிர்வாகம் வகுத்த முன்னுதாரணத்தை தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ரணில் விக்ரமசிங்கவின் தலைவிதியைப் பார்ப்பது தமக்கு வருத்தமாக இருக்கிறது. அவரே தம்மை அரசியலுக்கு அழைத்து வந்தவர். எனினும் அவருடைய கைது விடயத்தில் நடப்பு அரசாங்கம் மேற்கொண்ட முன்னுதாரணத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக பொன்சேகா கூறியுள்ளார். 

 இந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில் ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget