Ads (728x90)

டுபாயில் நேற்று நடைபெற்ற 17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது. 

பந்துவீச்சில் குல்தீவ் யாதவ் 04, பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் பட்டேல் மூவரும் தலா 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

147 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 05 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்று 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

அவ்வணி சார்பாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69, சிவம் துபே 33, சஞ்சு சாம்சன் 24 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் பகிம் அஷ்ரப் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


Post a Comment

Recent News

Recent Posts Widget