Ads (728x90)

அனைத்து வரி செலுத்துவோரும் செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வரிகளை செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

தனிநபர்கள், நிறுவனங்கள், நிறுவன கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதி கட்டணத்தை இணையவழி வரி செலுத்தும் தளம் அல்லது இலங்கை வங்கியின் எந்த கிளையிலும் செலுத்த முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தாமதங்கள் அல்லது தவறவிட்ட கட்டணங்கள் வட்டி மற்றும் அபராதங்களுக்கு வழிவகுக்கும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget