Ads (728x90)

செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின், ஐஸ், கொக்கேய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் (SDIG) கைபேசி இலக்கத்திற்கு நேரடியாக அழைத்து பொதுமக்கள் வழங்கலாம் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 

அவ்வாறு வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் நிலையில் தேவையான சோதனைகள், நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க குடிமக்களாக நீங்கள் வழங்கும் ஆதரவை இலங்கை காவல்துறை பெரிதும் பாராட்டுகிறது.

மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களின் பெயர்கள் மற்றும் கைபேசி இலக்கங்கள் பின்வருமாறு:

மேல் மாகாணம்: சஞ்சீவ தர்மரத்ன - 071-8591991

தென் மாகாணம்: தகித்சிறி ஜெயலத் - 071-8591992

ஊவா மாகாணம்: மகேஷ் சேனநாயக்க - 071-8592642.

சப்ரகமுவ மாகாணம்: மஹிந்த குணரத்ன - 071-8592618

மத்திய மாகாணம்: லலித் பத்திநாயக்க - 071-8591985

வடமேற்கு மாகாணம்: அஜித் ரோஹண - 071-8592600

வடமத்திய மாகாணம்: புத்திக சிறிவர்தன - 071-8592645

வடக்கு மாகாணம்: டி.சி.ஏ. தனபால 071-8592644

கிழக்கு மாகாணம்: வருண ஜெயசுந்தர - 071-8592640


Post a Comment

Recent News

Recent Posts Widget