Ads (728x90)

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2025 உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இந்நிலையில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இங்கிலாந்து சார்பில் அணி தலைவி நட் சிவர்-ப்ரண்ட் அதிகபட்சமாக 117 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அவருக்குத் துணையாக டாம்மி பியூமண்ட் 32 ஓட்டங்களும், ஹீதர் நைட் 29 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.

இனோகா ரணவீர சிறப்பாகப் பந்துவீசி 10 ஓவர்களில் 33 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுகந்திகா குமாரி மற்றும் உதேஷிகா பிரபோதனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

254 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 45.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget