பார்வையற்றோருக்கான மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் இடம்பெற்றது.
இலங்கையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதின. இறுதிப்போட்டி நேற்று து.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய நேபாள அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களை எடுத்தது.
நேபாளம் அணியில் அதிகபட்சமாக சரிதா கிம்ரே 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், இந்திய அணி சார்பில் அனுகுமாரி, ஜமுனா ராணி தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் புலா சரேன் அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றார்.

Post a Comment