Ads (728x90)

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும், அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கிச் செல்ல முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று முற்பகல் தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார். 

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.  

தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் நாட்டிற்கும், மக்களுக்கும் இராணுவம் ஆற்றிய சேவை பாராட்டத்தக்கது என்றும், இலங்கை இராணுவமாக நமது தாய்நாட்டின் மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அசைக்க முடியாத பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இந்த விடயத்தில் உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் உள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget