களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் முன்னதாக கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக மதுகமவில் உள்ள சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர சிலைக்கு முன்னால் ஒரு போராட்டத்தை நடத்தினார். ஆனால் தற்போது அவர் அதே சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்.
இந்த கல்வி சீர்திருத்தங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் சஜித் பிரேமதாச போன்ற நபர்கள் அதிகளவில் உருவாகும் வாய்ப்புள்ளது. இந்த சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதற்கு இது மற்றொரு காரணம் என்றார்.
மேலும் புதிய தொகுதிகளில் சுமார் 147 பிரச்சினைகள் இருப்பதாக சஜித் கூறியதாகத் தெரிவித்த அமைச்சர், சஜித் பிரேமதாசவின் தாளத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என்றும் தெரிவித்தார்.

Post a Comment