படத்தை பற்றி ட்விட்டரில் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எம்ஜிஆரின் தீவிர ரசிகராக ராஜ்கிரண் நடித்துள்ளார். அவரின் பேரனாக கார்த்தி நடித்துள்ளார். எம்ஜிஆர் இறந்த போது கார்த்தி பிறக்கும் மாதிரி காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் எம்ஜிஆரின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத ராஜ்கிரண் கார்த்தி பிறந்ததும் ‘வாத்தியாரே பிறந்துவிட்டார்’என கொண்டாடுகிறார்.
எம்ஜிஆரின் மறுபிறப்பாக ராஜ்கிரண் கார்த்தியை பார்க்க ஆரம்பிக்கிறார். அதிலிருந்து கதை எப்படி போகிறது என்பதுதான் திரைப்படம். இரண்டாம் பாதியில் இரண்டு இடங்களில் எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் வருகிறது.
சொல்ல வரும் கதையும் ஈர்ப்பை ஏற்படுத்துவதாகவும் மொத்தத்தில் இந்தப் படம் குடும்பமாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
இது ஒரு சுமாரான, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஒரு முறை பார்க்கலாம் என்ற வகை படமாகும்.
கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’.

Post a Comment