Ads (728x90)

யாழ்ப்­பாண வர்த்­த­கர் தி.துவா­ர­ கேஸ்­வ­ர­னுக்கு எதி­ராகப் பகி­ரங்­கப் பிடி­யாணை உத்­த­ரவு பிறப்­பித்­தது கொழும்பு, புதுக்­கடை நீதி­வான் மன்று.
தேசி­யப் போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு உத்­தி­யோ­கத்­தர்­களை கடமை செய்­ய­வி­டாது அடா­வ­டி­யில் ஈடு­பட்­டார் என்ற குற்­றச்­சாட்­டில் அவ­ருக்கு எதி­ராக பொலி­ஸா­ரால் தாக்­கல் செய்த வழக்­கி­லேயே நீதி­மன்று இந்த உத்­த­ர­வைப் பிறப்­பித்­தது.
இந்த வழக்­கில் கைது செய்­யப்­பட்ட, துவா­ர­கேஸ்­வ­ர­னின் போக்­கு­வ­ரத்­துச் சேவை­யில் பணி­யாற்­றும் பேருந்து சார­தியை விளக்­க­ம­றி­ய­லில் வைக்க நீதி­வான் மன்று கட்­ட­ளை­யிட்­டது.
“தேசி­யப் போக்­கு­வ­ரத்து ஆணைக்­கு­ழு­வுக்­குச் செலுத்த வேண்­டிய கட்­ட­ணத்தைச் செலுத்­து­வ­தில் முரண்­பட்ட வர்த்­த­கர் துவா­ர­கேஸ்­வ­ரன், அங்கு பணி­யாற்­றும் அலு­வ­ல­ர்­க­ளு­டன் அடா­வ­டித் தனம் புரிந்­துள்­ளார். அது தொடர்­பில் தேசி­யப் போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு அதி­காரி பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­தார்.
அந்த முறைப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் புதுக்­கடை நீதி­வான் மன்­றில் துவா­ர­கேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கு­தல் செய்­யப்­பட்­டது.
அத்­து­டன், தேசி­யப் போக்­கு­வ­ரத்து ஆணைக்­கு­ழு­வின் அறி­வு­றுத்­தலை மீறி பேருந்தை நிறுத்தி வைத்த குற்­றச்­சாட் டில் துவா­ர­கேஸ்­வ­ர­னின் போக்­கு­வ­ரத்­துச் சேவை­யில் பணி­யாற்­றும் சாரதி கைது செய்­யப்­பட்­டார். அவர் நீதி­மன் றின் உத்­த­ர­வில் விளக்­க­ம­றி­ய­ லில் வைக்­கப்­பட்­டார்.
வர்த்­த­க­ரைக் கைது செய்து மன்­றில் முற்­ப­டுத்­து­மாறு அவ­ருக்கு எதி­ராக புதுக்­கடை நீதி­மன்­றால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது” என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget