Ads (728x90)

மூன்று மாகாண சபைத் தேர்­தல்­களை ஒத்­தி­வைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னத்­துக்கு எதி­ராக நீதி­மன்­றம் செல்­ல­வுள்­ள­தாக மகிந்த அணி தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து தேர்­தல்­கள் ஆணை­ய­கத் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரி­ய­வுக்கு எழுத்­து­மூல அறி­வித்­தல் ஒன்­றை­யும் அது அனுப்­பி­யுள்­ளது.
மகிந்த அணி சார்­பில் முன்­னாள் அய­லு­றவு அமைச்­சர் ஜீ.எல்.பீரிஸ், அரச தலை­வர் சட்­டத்­த­ரணி ரொமேஷ் டீ சில்­வா­வின் மூலம் தேர்­தல்­கள் ஆணை­யா­ள­ருக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தில், இந்த வரு­டத்­தின் செப்­ரெம்­பர், – ஒக்­ரோ­பர் மாதங்­க­ளில் பத­விக்­கா­லம் நிறை­வ­டை­ய­வுள்ள மூன்று மாகாண சபைத் தேர்­தல்­க­ளும் உட­ன­டி­யாக நடத்­தப்­ப­ட­வேண்­டு­மெ­ன­வும், எந்­தக் கார­ணத்­தைக்­கொண்­டும் அந்­தத் தேர்­தல்­கள் தாம­திக்­கப்­பட்­டால் மேல­திக அறி­வித்­தல்­கள் எது­வு­மின்றி தாங்­கள் நீதி­ மன்­றத்­தில் வழக்­கொன்­றைத் தொட­ர­வி­ருப்­ப­தா­க­வும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
நாட்­டின் ஒன்­பது மாகாண சபைத் தேர்­தல்­க­ளை­யும் ஒரே­ நே­ரத்­தில் நடத்­தப்­போ­வ­தா­கக் கார­ணங்­காட்­டிப் பத­விக்­கா­லம் முடி­வ­டை­ய­வுள்ள மூன்று மாகாண சபைத் தேர்­தல்­க­ளை­யும் அரசு ஒத்­தி­வைத்­தி­ருக்­கும் நிலை­யில், மகிந்த நீதி­மன்­றத்தை நாடு­வது முக்­கிய திருப்­ப­மா­கு­மென அர­சி­யல் அவ­தா­னி­கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget