Ads (728x90)

தர்மநெறி தவறாத தனுசு ராசி ராசி அன்பர்களே!  
ராசிக்கு 9ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு 8-ம் இடமான கடகத்திற்கு  செல்கிறார். உறவினரால் பிரச்னை, முயற்சியில் தடை குறுக்கிடலாம்.ராசிக்கு 3-ம் இடமான கும்பத்தில் இருந்து கேது 2ம் இடமான மகரத்திற்கு வருகிறார். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. திருட்டு போகவும் வாய்ப்புண்டு.

சனிபகவான் தற்போது 12-ம் இடத்தில் இருக்கிறார். ஏழரை சனி காலம் என்பதால் துன்பம் அனுபவித்து இருப்பீர்கள். ஆனால் சனியின் 7-ம் பார்வை மூலம்  பொருளாதார வளம் சேரும்.  டிச. 18ல் உங்கள் ராசிக்கு மாறுவதால் உடல்நலம் பாதிக்கலாம். உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்படலாம்.10-ம் இடத்தில் உள்ள குரு பகவானால், சிரமம் குறுக்கிட்டாலும் அவரது பார்வை பலத்தால் குறையனைத்தும் தீரும். அவர் செப்.1ல் 11-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பானதாகும். அவரின் 7, 9-ம் இடத்து பார்வையால் நன்மை அதிகரிக்கும்.  2018 பிப்.13-ல்  12-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அதன்பின் நன்மை பெற இயலாது.

இனி கால வாரியாக விரிவான பலனைக் காணலாம். 2017 ஜூலை – டிசம்பர் பணப்புழக்கம் இருந்தாலும் திடீர் செலவு உருவாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. முயற்சியில் தடை குறுக்கிடலாம். முக்கிய விஷயங்களை குடும்ப பெரியவர்களின் ஆலோசனை பெற்று நிறைவேற்றவும். 

திருமணம் போன்ற சுபவிஷயங்களில் தடை குறுக்கிடலாம். கணவன், -மனைவி இடையே கருத்துவேறுபாடு தலைதூக்கும். ஆக. 31க்கு பிறகு நிலைமை சீராகும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சலுக்கு ஆளாகலாம். அரசு வகையில் பிரச்னையை தவிர்க்க வரவு- செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக. 31-க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும்.

பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம்.  சிலர் பதவி அல்லது பொறுப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்படலாம். குருவின் பார்வை பலத்தால் ஓரளவு நன்மை உண்டாகும். ஆக. 31-க்கு பிறகு  நன்மையை எதிர்பார்க்க முடியும். கலைஞர்கள் விடாமுயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.   அரசியல்வாதிகளுக்கு  எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்றால் முன்னேற்றம் உண்டாகும்.  விவசாயிகளுக்கு   மானாவாரி பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில்  விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஆக. 31-க்கு பிறகு நன்மை அதிகரிக்கும்.

2018 ஜனவரி– 2019 பிப்ரவரி ராகு-, கேது இரண்டும் சாதகமற்று இருந்தாலும் குருபலத்தால் தடைகளை முறியடிக்கும் வலிமை உண்டாகும். 2018 பிப். 13-க்கு பிறகு  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது.  விருந்து, விழா என செல்ல வாய்ப்புண்டாகும். வாகனப் பயணத்தால் இனிய அனுபவம் காண்பீர்கள். சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுக வாய்ப்புண்டு. பொருள் திருடு போக வாய்ப்புண்டு.  எச்சரிக்கையாக இருக்கவும்.

தொழில் வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் பயணம் வெற்றி பெறும். பணியாளர்கள் முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.  2018 பிப்.13-க்கு பிறகு பணிச்சுமை அதிகரிக்கும். குருபகவான் 2018 ஏப். 9- முதல் செப்.3 வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். இதனால் பணியாளர்களுக்கு பதவி உயர்வு  கிடைக்கும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் சீரான வளர்ச்சி காண்பர்.  2018 பிப். 13-க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்து  படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.   விவசாயிகள் சிறப்பான பலன் பெறுவர். பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும்.

பரிகாரம்: வெள்ளியன்று நாக தேவதை வழிபாடு சனிக்கிழமையில் அனுமனுக்கு அர்ச்சனை, பிரதோஷத்தன்று சிவனுக்கு நெய்தீபம்




அனைவரிடமும் அன்பு காட்டும்  மகர ராசி அன்பர்களே!
ராசிக்கு 8ம் இடத்தில் இருக்கும் ராகு,  தற்போது 7ம் இடமான கடகத்திற்கு செல்வதால் தூரதேசம் செல்லவும் அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்புண்டு. 2ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, இப்போது உங்கள் ராசிக்கு வருகிறார். இதனால் காரிய தடை, உடல் உபாதை வரலாம்.

11ம் இடத்தில் உள்ள சனிபகவானால் பணப்புழக்கம் இருந்திருக்கும். டிச.18ல் அவர் 12ம் இடத்திற்கு மாறுகிறார். அவரால் பொருளாதார இழப்பு வரலாம். எதிரிகளால் இடையூறு உருவாகலாம். எதிர்நீச்சல் அடித்து உழைத்தால் மட்டுமே வாழ்வில் சாதிக்க முடியும்.  குருபகவான் 9ம் இடத்தில் இருப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை  வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். ஆக. 31க்குப் பிறகு 10ம் இடத்திற்கு செல்கிறார். அதன் பின் பொருள் நஷ்டம், மனசஞ்சலம் உண்டாகும். 2018 பிப்.13ல் 11ம்  இடத்திற்கு மாறிய பின், பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும்.

இனி கால வாரியாக விரிவான பலனைக் காணலாம். 2017 ஜூலை – டிசம்பர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கைகூடும்.  கணவன் மனைவி இடையே அன்பு மேம்படும்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு, மனை வாங்க யோகம் உண்டாகும்.  2017 ஆக. 31க்கு பிறகு குரு பகவானால் பொருள் நஷ்டம், மன சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. பணியாளர்கள் சீரான முன்னேற்றம் காணலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். தொழில் வியாபாரிகளுக்கு வளர்ச்சி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ்,  பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வாழ்வில் மேம்பாடு அடைவர். மாணவர்கள் சிறப்பான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். ஆக.31க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க நேரிடும். பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.

பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆக. 31க்கு பிறகு குடும்பத்தில் விட்டுக்கொடுக்கவும்.  2018 ஜனவரி– 2019 பிப்ரவரி ராகுவால் இடப்பெயர்ச்சி,  அவப்பெயரைச் சந்திக்க நேரலாம். நட்பு விஷயத்திலும் விழிப்புடன் இருப்பது நல்லது. கேதுவால் முயற்சியில் தடை, உடல் உபாதை ஏற்படலாம். குரு சாதகமாக இல்லை என்றாலும் அவரது பார்வை பலத்தால் தடைகளை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள்.  2018 பிப்.13க்குப் பிறகு குருவால் சிறப்பான நிலை உருவாகும்.

குடும்பத்தில் பெண்களால் பொன் பொருள் சேரும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். குரு பகவான் 2018 ஏப். 9 முதல்  2018 செப். 3 வரை  வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது நன்மையை எதிர்பார்க்க முடியாது. தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். புதிய வியாபார முயற்சியிலும் ஈடுபடுவது கூடாது. இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு.அரசின் சோதனைக்கு ஆளாகலாம்.

பணியாளர்கள் வேலைப் பளு, அலைச்சலுக்கு ஆளாவர். 2018 பிப்.13க்கு பிறகு வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.  கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஆனால் விடா முயற்சிஅவசியம். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. 2018 பிப்ரவரி 13க்கு பிறகு கல்வி வளர்ச்சி காண்பர். குருபார்வையால் போட்டியில் வெற்றி பெறுவர். விவசாயம் சீராக இருக்கும். வழக்கு விவகாரங்களில் சுமாரான பலன் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். குருவின் 5ம் பார்வையால் பண வரவு அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளி ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு தீபம், சனிக்கிழமையில் கிருஷ்ணருக்கு அர்ச்சனை.

Post a Comment

Recent News

Recent Posts Widget