Ads (728x90)

நாட்டின் 17 மாவட்­டங்­களில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான வரட்­சியின் கார­ண­மாக மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.
இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் வரட்­சி­யினால் மாத்­திரம் 3 இலட்­சத்து 14 ஆயி­ரத்து 49 குடும்­பங்­களைச் சேர்ந்த 10 இலட்­சத்து 93 ஆயி­ரத்து 717 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகா­ணங்­க­ளி­லேயே அதி­க­ளா­வானோர் வரட்­சி­யினால் குடி­நீ­ரின்றி கடு­மை­யான பாதிப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­தா­கவும், அவர்­க­ளுக்­கான குடி­நீரை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் ஊடக பேச்­சாளர் பிரதிப் கொடிப்­பிலி தெரி­வித்தார்.
இது தொடர்பில்  அவர் மேலும் தெரி­விக்­கையில்,
வட­மா­கா­ணத்தின் கிளி­நொச்சி மாவட்­டத்தில் 04 பிர­தேச செய­ல­கப்­பி­ரிவைச்  சேர்ந்த 24 ஆயி­ரத்து 06 குடும்­பங்­களில் வசிக்கும் 83 ஆயி­ரத்து 378 பேரும்,  வவு­னியா மாவட்­டத்தில் 04 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 24 ஆயி­ரத்து 507 குடும்­பங்­களில் வசிக்கும் 85 ஆயி­ரத்து 771 பேரும்  முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் 06 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 35 ஆயி­ரத்து 730 குடும்­பங்­களில் வசிக்கும் ஒரு இலட்­சத்து 15 ஆயி­ரத்து 308 பேரும், பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 
யாழ்ப்­பாண மாவட்­டத்தின் 15 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 34 ஆயி­ரத்து 49 குடும்­பங்­களில் வசிக்கும் ஒரு இலட்­சத்து 24 ஆயி­ரத்து 206 பேரும், மன்னார்; மாவட்­டத்தில் 05 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 15 ஆயி­ரத்து 386 குடும்­பங்­களில் வசிக்கும் 52 ஆயி­ரத்து 152 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
கிழக்கு மாகா­ணத்தின் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 11 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 27 ஆயி­ரத்து 646 குடும்­பங்­களில் வசிக்கும் 1 இலட்­சத்து ஐயா­யி­ரத்து 947 பேரும்  மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 09 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்து 19 ஆயி­ரத்து 685 குடும்­பங்­களில் வசிக்கும் 65 ஆயி­ரத்து 341 பேரும், அம்­பாறை மாவட்­டத்தில் 09 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்து 11 ஆயி­ரத்து 672 குடும்­பங்­களில் வசிக்கும் 40 ஆயி­ரத்து 548 பேரும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
 புத்­தளம் மாவட்­டத்தில் 13 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 36 ஆயி­ரத்து 783 குடும்­பங்­களில் வசிக்கும் ஒரு இலட்­சத்து 31 ஆயி­ரத்து 51 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
வட­மத்­திய மாகா­ணத்தில் பொலன்­ன­றுவை மாவட்­டத்தின் 03 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 6 ஆயி­ரத்து 556 குடும்­பங்­களில் வசிக்கும் 23 ஆயி­ரத்து 919 பேரும், அனு­ரா­த­புரம் மாவட்­டத்தின்; 11 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 16 ஆயி­ரத்து 729 குடும்­பங்­களில் வசிக்கும் 55 ஆயி­ரத்து 683 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
மத்­திய மாகா­ணத்தில் மாத்­தளை மாவட்­டத்தில் 05 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 5 ஆயி­ரத்து 832 குடும்­பங்­களில் வசிக்கும் 20 ஆயி­ரத்து 341 பேரும் கண்டி மாவட்­டத்தில் 02 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 72 குடும்­பங்­களில் வசிக்கும் 300 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகா­ணத்­தி­லேயே அதி­க­ள­வானோர் குறித்த வரட்­சி­யினால்  பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தற்­போது இய­லு­மா­ன­வரை பாதிக்­கப்­பட்­டுள்­ளோ­ருக்­கான குடி­நீரை கொள்­க­லன்­களில் மூலம் விநி­யோ­கிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. என்றார்.     
இந்­நி­லையில் வட­மா­கா­ணத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு குடி­நீரைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு தேவை­யான நிதி  மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 48 இலட்சம் ரூபாவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 21 இலட்சம் ரூபாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 30 இலட்சம் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு மூன்றரை இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டிருப்பதாக அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget