Ads (728x90)

அமைச்­சுப் பதவி சுமை­யாக இருப்­ப­தா­க­வும், எந்த நேர­மும் அலை­பே­சிக்கு அழைப்­புக்­கள் வந்து கொண்­டி­ருப்­ப­தா­க­வும் புதி­தாக அமைச்­சுப் பத­வி­யேற்ற திரு­மதி அனந்தி சசி­த­ரன் சக மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ளார்.
வடக்கு மாகாண சபை­யின் அமர்வு அண்­மை­யில் இடம்­பெற்­றது. இதன்­போதே, தனது மனப்­பா­ரங்­களை சக உறுப்­பி­னர்­க­ளி­டம் அவர் பகிர்ந்து கொண்­டுள்­ளார்.
அமைச்­சுப் பதவி ஏற்­ற­தி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக அலை­பேசி அழைப்­புக்­கள் வந்து கொண்­டி­ருப்­ப­தா­க­வும், முன்­னாள் போரா­ளி­கள் உள்­ளிட்ட பலர் தொடர்ச்­சி­யாக உத­வி­கள் கோரு­வ­தா­க­வும் அவர் இதன்­போது குறிப்­பிட்­டுள்­ளார்.
அமைச்­சுப் பதவி கடும் சுமை­யாக இருப்­ப­தா­க­வும் அவர் கருத்­துப் பகிர்ந்­துள்­ளார். அதற்கு சக உறுப்­பி­னர்­கள், அவரை உற்­சா­கப்­ப­டுத்­தும் வகை­யில் கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­துள்­ள­னர்.
வடக்கு மாகாண சபை­யில் அமைச்­சர்­கள் இரு­வரை பதவி நீக்க வேண்­டும் என்று, முத­ல­மைச்­சர் நிய­மித்த விசா­ர­ணைக் குழு பரிந்­து­ரைத்­தி­ருந்­தது. இத­னைத் தொடர்ந்து அமைச்­சர்­க­ளாக பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் த.குரு­கு­ல­ராசா ஆகி­யோர் பதவி வில­கி­யி­ருந்­த­னர்.
அந்த வெற்­றி­டத்­துக்கு திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் க.சர்­வேஸ்­வ­ரன் ஆகிய இரு­வ­ரும் நிய­மிக்­கப்­பட்­டி­ ருந்­த­னர். இவர்­கள் அமைச்­சுப் பத­வி­களை ஏற்று ஒரு மாதமே கடந்­துள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget