Ads (728x90)

எதிர் வரும் காலங்­க­ளில் வட்­டார முறை­யி­லான உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் இடம்­பெ­ற­வுள்­ளது. உங்­கள் அபி­வி­ருத்­தி­யில் முன்­னின்று செயற் ப­டக்­கூ­டிய துடிப்­பா­ன­வர்களைத் தெரிவு செய்­ய­வேண்­டிய தேவை உங்­ளுக்கு உள்­ளது.
எனவே ஒவ்­வொரு இளை­ஞர்­க­ளும் அர­சி­யல் பற்­றித் தெரிந்து வைத்­தி­ருக்க வேண்­டி­யது காலத்­தின் தேவை­யா­கும். என தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார்.
வட­ம­ராட்சி குஞ்­சர்­கடை கொலின்ஸ் விளை­யாட்­டுக் கழ­கத்­தின் ஏற்­பாட்­டில் கழ­கத்­த­லை­வர் ஜே.ஜெயச் சந்­தி­ரன் தலை­மை­யில், வட­ம­ராட்சி பிறீமி­யர் லீக் கால்ப்­பந்­தாட்­டச் சுற்றுப் போட்­டி­யின் இறு­தி­யாட்ட நிகழ்­வு நேற்றுமுன்­தி­னம் இடம் பெற்­றது. இந்த நிகழ்­வில் முதன்மை விருந் தின­ரா­கக் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
இன்­றைய நாள் பொன்­னான நாளா­கும். பெரு­ம­ள­வான இளை­ஞர்­கள் ஒன்று கூடி­யுள்­ளீர்­கள்.இளை­ஞர்­க­ளாகிய நீங்­கள் எதிர்­கால அபி­வி­ருத்தி கருதி அர­சி­ய­லில் பங்கு கொள்ள முன்­வ­ர ­வேண்­டும்.
இன்று எமது பிர­தே­சங்­க­ளில் இடம்­பெ­று­கின்ற பல்­வேறு பட்ட எதிர்ப்பு மற்­றும் ஆத­ர­வுப் பேர­ணி­க­ளில் கலந்து கொண்டு உரி­மைக்­கு­ரல் கொடுத்து வரு­கின்­றீர்­கள்.
அந்த வகை­யில் இளை­ஞர்­க­ளின் அர­சி­யல் பிர­வே­சம் என்­பது தவிர்க்க முடி­யாத ஒன்­றா­கக் காணப்­ப­டு­கின்­றது. நாடா­ளு­மன்­றத்­தில் 25 வீதம் பெண்­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டு­மென சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது போல ஒவ்­வொரு அர­சி­யல் கட்­சி­க­ளும் 25 வீதம் இளை­ஞர்­க­ளுக்கு ஒதுக்க வேண்­டும் என விரை­வில் சட்­டம் கொண்­டு­ வ­ரப்­ப­ட­வுள்­ளது. அவ்­வாறு சட்­டம் வரும்­போது இளை­ஞர்­கள் அர­சி­ய­லில் பங்­கேற்று எமது பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்­ய­வேண்­டும் – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget