ஆனால், போயஸ் தோட்டத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசுக்கு உரிமையில்லை என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும், வீடு எங்களுக்கே சொந்தம் என தீபக்கும் கூறியிருந்தனர்.
வீட்டின் உரிமையாளர்கள் யாரோ அவர்களுக்கு இழப்பீடு அளித்து போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறினார்.
இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு பணியில் இருந்த தனியார் பாதுகாப்பு ஊழியர்களை வெளியேற்றிய போலீசார், தோட்ட பணியாளர்களை மட்டும் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதித்தனர். வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

Post a Comment