Ads (728x90)

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வை­யும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வை­ ­யும் அவர்­க­ளது அலு­வ­லக அதி­கா­ரி­க­ளை­யும் இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் நேற்று  கடு­மை­யா­கச் சாடி­னார்.
கொந்­த­ளிப்­பான அவ­ரது பேச்­சால், அதி­கா­ரி­கள் ஆடிப்­போ­னார்­கள். குழம்­பிப் போனார்­கள்.மரு­தங்­கேணி பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம், இணைத் தலை­வர்­க­ளான திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், அங்­க­ஜன் இரா­ம­நா­தன், எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோர் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது.
கூட்­டத்­தின் ஆரம்­பத்­தில் உரை­யாற்­றிய திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்­த­தா­வது: ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டங்­கள் நடை­பெ­றா­மை­யி­னால் பாதிக்­கப்­ப­டு­வது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ, அதி­கா­ரி­களோ அல்­லர். மக்­கள்­தான். கூட்­டங்­கள் ஒழுங்­காக நடக்­கா­த­தால் ஒதுக்­கப்­ப­டு­கின்ற நிதி திரும்­பிச் செல்­கின்­றது. எங்­க­ளது நிதி தென்­ப­கு­திக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.
14 மாதங்­க­ளுக்­குப் பின்­னர் மரு­தங்­கேணி பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நடை­பெ­று­கின்­றது. போகிற போக்­கில் இந்­தக் கூட்­டத்­தை­யும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வந்­து­தான் நடத்த வேண்­டிய கட்­டா­யம் வரும்.
அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வின் செய­ல­கம் மாறு­பா­டான கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வரு­வதே இதற்­குக் கார­ணம். அரச தலை­வ­ரின் செய­ல­கம் முரண்­பா­டான கருத்­துக்­களை அனுப்­பிக் கொண்­டி­ருக்­கின்­றது.
அதனை அரச தலை­வர் அனுப்­பு­கின்­றாரா, தலைமை அமைச்­சர் அனுப்­பு­கின்­றாரா, அங்கு இருக்­கின்ற அதி­கா­ரி­கள் அனுப்­பு­கின்­ற­னரா? நான் நினைக்­கின்­றேன், அங்­கி­ருக்­கின்ற அதி­கா­ரி­கள் மது­பான விருந்­து­க­ளுக்­குச் சென்­று­விட்டு அலை­பேசி மூல­மாக மாறு­பா­டான தக­வல்­களை வழங்­கு­கின்­றார்­கள் என்று.
இந்­தப் பகுதி மக்­கள் போரால் பாதிக்­கப்­பட்­டார்­கள். கடந்த அர­சால் பாதிக்­கப்­பட்­டார்­கள். தற்­போது கூட்டு அர­சா­லும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். (அந்த அர­சில்­தான் அவ­ரும் அமைச்­ச­ராக இருக்­கி­றார்)
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொல­ன­றுவை மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்.
தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொழும்­பைச் சேர்ந்­த­வர். ஆனால் இந்­தப் பகுதி அபி­வி­ருத்­தியை அவர்­கள்­தான் தீர்­மா­னிக்­கி­றார்­கள். யாழ்ப்­பாண மாவட்­டத்­தி­லி­ருந்து 7 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார்­கள்.
தேசி­யப் பட்­டி­யல் ஊடா­க­வும் ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இங்­கி­ருந்து தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளது கருத்­துக்­க­ளைக் கட்­டா­யம் கேட்­க­வேண்­டும். அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் தங்­கள் மாவட்­டங்­களை, மாகா­ணங்­களை அபி­வி­ருத்தி செய்­து­கொண்டு எங்­க­ளைக் கூலி ஆள்­கள் போன்று, அவர்­க­ளுக்கு வேலை செய்­ப­வர்­கள் போன்று பயன்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றார்­கள்.
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனிப்­பட்ட ரீதி­யில் சர்­வா­தி­கா­ரம் செலுத்­து­வார் என்­றால், நாங்­கள் இதி­லி­ருந்து வில­கு­கின்­றோம். சர்­வா­தி­கார ஆட்சி முறைக்கு நீங்­கள் யாரும் துணை போகக் கூடாது.
வித்­தியா விவ­கா­ரம்
சமூக வலைத்­த­ளங்­க­ளி­னால் நான் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றேன். நான் பிழை செய்­ய­வில்லை. புங்­கு­டு­தீவு மாண­வி­யின் படு­கொலை நடந்த பின்­னர், சந்­தே­க­ந­பர் கட்டி வைக்­கப்­பட்ட இடத்­துக்கு நான்­தான் சென்­றி­ருக்­கின்­றேன். அங்கு மூன்று மணித்­தி­யா­லம் காத்­துக் கொண்­டி­ருந்­தும், பிர­திப் பொலிஸ் மா அதி­பர் ஒரு பொலி­ஸா­ரை­யும் அனுப்­ப­வில்லை. மாணவி படு­கொ­லைக்கு கார­ண­மா­ன­வர்­க­ளின் பெயர்ப் பட்­டி­யலை நான்­தான் கொடுத்­தேன் – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget