Ads (728x90)

யாழ். நல்லூர் கோவிலின் பின்­பு­ற­மாக இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூடா­னது நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்­ததா? இல்­லையா என்­பதை விசா­ர­ணையின் நிறைவில் துல்­லி­ய­மாக அறிய கூடி­ய­தாக இருக்கும். இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களின் படி  அது திடீ­ரென ஏற்­பட்ட சம்­ப­வ­மா­கவே உள்­ளது.  
அது திட்­ட­மி­டப்­பட்­ட­தல்ல. எவ்­வா­றா­யினும் நாம் ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை இழந்­து­விட்டோம் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்தார்.   
எனினும் அது தொடர்பில் பூரண விசா­ரணை ஒன்று இடம்­பெறும் நிலையில் உண்மை வெளிப்­ப­டுத்­தப்­படும். எனவே விசா­ரணை உள்ள நிலையில் மேல­தி­க­மாக அது தொடர்பில் என்னால் எத­னையும் கூற முடி­யாது   என்றும் அவர் குறிப்­பிட்டார்.  
 யாழ். தலைமை பொலிஸ் நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே­பொலிஸ் மா அதிபர்  இதனைத் தெரி­வித்தார்.
யாழ்.  மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனின் பாது­கா­ப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் மீதான துப்­பாக்கிச் சூடு தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் கருத்து தெரி­விக்கும் போது அது நீதி­ப­தியை இலக்கு வைத்­தது அல்ல என கூறி­யுள்ளார். உண்­மையில் அச்­சம்­ப­வத்தின் பின்­னணி என்ன?' என ஊட­க­வி­ய­லா­ளர்கள் இதன்­போது பொலிஸ் மா அதி­ப­ரிடம் கேள்வி எழுப்­பினார்.
பொலிஸ் மா அதிபர்  மேலும் குறிப்­பி­டு­கையில், ஆம், இதிலே பல கோணங்கள் உள்­ளன. மதிப்­புக்­கு­ரிய நீதி­பதி ஒரு விட­யத்தை கூறு­கின்றார். பொதுமக்கள் இன்­னொரு விட­யத்தை கூறு­கின்­றார்கள். சில நேரடி சாட்­சி­யா­ளர்கள் இன்­னொரு விட­யத்தை கூறி­யுள்­ளார்கள். எனினும் இவை அனைத்தும் கணக்கில் கொள்­ளப்­பட்டு விசா­ரணை நடக்­கி­றது. தற்­போதும் அது விசா­ரணை மட்­டத்தில் உள்­ளது.  எனவே விசா­ர­ணை­களின் நிறைவில்  இலக்கு தொடர்பில் தெளி­வான முடி­வுக்கு வரலாம்.
 எனினும் இது­வரை, குறித்த சம்­பவம் திட்­ட­மி­டப்­பட்­ட­தல்ல என்­பதும், திடீ­ரென ஏற்­பட்­டது என்­பதும் தெரி­ய­ வந்­தி­ருக்­கின்­றது. நீதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில்  பொலிஸார் அதிக அக்கறை செலுத்தியுள்ள நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறா வண்ணம் நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்படவேண்டும்  என்றார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget