Ads (728x90)

இந்­திய இரா­ணு­வத்­துக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி வீரச் சாவ­டைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீ ­ப­னின் நினை­வாக நல்­லூர் பின் வீதி­யில் அமைக் கப்­பட்­டுள்ள தூபியை, யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை பொறுப்­பேற்க வேண்­டும்’’ என்று வடக்கு மாகாண சபை­யால் கோரிக்கை விடுக்­கப்­பட் டுள்­ளது.
தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளு­டான போரில் உயி­ரி­ழந்த இந்­திய இரா­ணு­வச் சிப்­பாய்­கள் நினை­வாக அமைக்­கப்­பட்ட தூபியை 27 ஆண்­டு­க­ளின் பின்­னர் கண்­டு­பி­டித்து, அதற்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே, வடக்கு மாகாண சபை திடீ­ரென மேற்­படி கோரிக்­கையை நேற்று முன்­வைத்­துள்­ளது.
வடக்கு மாகாண சபை­யின் சிறப்பு அமர்வு நேற்று நடை­பெற்­றது. அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், ‘‘நல்­லூ­ரில் உள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி அமைந்­துள்ள இடத்தை எல்­லைப்­ப­டுத்தி, துப்­பு­ரவு செய்து யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை அத­னைப் பொறுப்­பேற்க வேண்­டும்’’ என்ற கோரிக்­கையை முன்­வைத்­தார்.
இதற்­கான கடி­தம் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை ஆணை­யா­ள­ருக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது. முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனே, உள்­ளு­ராட்சி அமைச்­ச­ரா­க­வும் உள்ள நிலை­யில் இந்த விட­யம் தொடர்­பில் அவர் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றும் அவைத் தலை­வ­ரால் கோரப்­பட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget