
தீவு நாடான ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்நிலையில் ஜப்பானைப் பொறுத்த வரை பலவேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் அந்தப் பகுதிகளில் அதிகாரப்பூர்வமாக திமிங்கில வேட்டை நடத்துவதனை வழக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நார்வே மற்றும் ஐஸ்லாந்து ஆகிய இரு நாடுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக திமிங்கில வேட்டையில் ஈடுபடுகின்றன.
திமிங்கிலத்தினை உணவுக்காக பயன்படுத்தும் பொருட்டே வர்த்தகரீதியிலான திமிங்கில வேட்டையில் ஈடுபட உள்ளதாக ஜப்பான் கூறும் அதே நிலையில், பொதுவாகவே கடந்த சில ஆண்டுகளில் திமிங்கில உணவு மீதான ஜப்பானியர்களின் மோகம் குறைந்து வருவதாகவே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
Post a Comment