
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் இன்று ஆரம்பமாகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பகலிரவு டெஸ்டாக நடைபெறவுள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் நிமிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி புதிய பழைய இளைய வீரர்கள் என ஒரு கலவையாக டுபாய் சென்றுள்ளது இலங்கை அணி.
இன்றைய போட்டியில் உள்ள இலங்கையும் சரி பாகிஸ்தானும் சரி தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் உலகுக்கு தங்களை நிரூபிக்கவும் இந்த டெஸ்ட் தொடரை பயன்படுத்தப்போவது நிச்சயம்.
Post a Comment