
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தற்போது தீர்ப்பை நிறைவு செய்தார்.
1ஆம், 7ஆம் எதிரிகளை விடுவிப்பதற்கு தீர்ப்பளித்துள்ள அவர் ஏனைய ஏழு எதிரிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பளித்தார்.
எதிரிகள் தரப்புச் சட்டத்தரணிகள் வழக்கை மறந்து நடந்து கொண்டனர். ஒரு மாணவி கொடூரமாக – மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் எதிரிகள் மீது சித்திரவதை செய்யப்பட்டது என்பதையே 200 பக்க விசாரணைக்கு கொண்டு வந்தனர்.
1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்த்து ஏனைய 7 எதிரிகளிடமும் ஏன் உங்களுக்குக் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பாயம் தற்போது கேட்டுள்ளது.
Post a Comment