Ads (728x90)

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதில் குற்றவாளிகளாகக் கண்ட 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

களுத்துறை சிறைச்சாலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதி,  அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், குறித்த வழங்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்கெள்ளப்பட்போது, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆறு பேருக்கு பத்தரை ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பட்டாளர் எமில்காந்தன் உள்ளிட்ட 9 பேர் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget