
அவசரகால ஏற்பாடுகளின் கீழ் முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த பல நடவடிக்கைகள் இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நீதித்துறையின் அனுமதியின்றி சுலபமாக வீடுகளில் சோதனையிடுவது மற்றும் தங்களுடைய சொந்த நகரங்களிலே தனி நபர்களை தடுப்புக்காவலில் வைப்பது ஆகியன இதில் அடங்கும்.
பிரான்ஸில் உள்ள பெரும்பான்மை மக்கள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும், மனித உரிமை குழுக்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி பாரிஸில், இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் குழுவை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து, ஃபிரான்ஸில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதுவரை ஆறு முறை அவசரகால நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்றே அவசரகால நிலை தொடர்ந்து நீடித்தால் அது ஜனநாயகமற்றதாக இருக்கும் என்ற ஒருமித்த கருத்த நிலவியதாக தெரிவிக்கிறார்.
இந்த பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவிற்கு 415 உறுப்பினர்கள் ஆதரவும், 127 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 19 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி சமீபத்தில்பிரான்ஸில் நீட்டிக்கப்பட்ட அவசரகால நிலை முடிவுக்கு வரும் நிலையில், அதற்கு முன்பாக இந்த மசோதா சட்டமாக இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Post a Comment