
எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமையும் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் நவம்பர் மாதம் 01ஆம் திகதியும் இடைக்கால அறிக்கை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.
காலை 10.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை முழுநாள் விவாதம் மூன்று தினங்களும் இடம்பெறவுள்ளதாக அரசியல் யாப்புசபையின் மேலதிக செயலாளர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம்திகதி அரசியலமைப்பு சபையில் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையிலேயே இதன்மீதானவிவாதம் இடம்பெறவுள்ளது.
Post a Comment