Ads (728x90)

புதிய அர­சியல் யாப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை குறித்து ஆராய்­வ­தற்­காக  அர­சியல் யாப்பு சபை மூன்று தினங்கள்  தொடர்ச்­சி­யாக கூட­வுள்­ளது.
எதிர்­வரும் 30 ஆம்­ தி­கதி  திங்­கட்­கி­ழ­மையும் 31 ஆம் ­தி­கதி செவ்­வாய்க்­கி­ழ­மையும் நவம்பர் மாதம் 01ஆம் திக­தியும்  இடைக்­கால அறிக்கை குறித்த விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது.

காலை  10.30 மணி­முதல் மாலை 6.30 மணி­வரை முழுநாள் விவாதம்  மூன்று தினங்­களும்  இடம்­பெ­ற­வுள்­ள­தாக  அர­சியல் யாப்­பு­ச­பையின்   மேல­திக செய­லாளர்  பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு எழுத்­து­மூலம்  அறி­வித்­துள்ளார்.

கடந்த 21 ஆம்­தி­கதி அர­சி­ய­ல­மைப்பு சபையில்  புதிய அர­சியல்  யாப்­புக்­கான  இடைக்­கால அறிக்கை  சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தமை  குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.  இந்த நிலையிலேயே  இதன்மீதானவிவாதம்  இடம்பெறவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget