
அதில் அவர், நான் உருவாக்கிய சமூக வலைதள கட்டமைப்பான பேஸ்புக் மற்றும் அதன் செயல்பாடுகள், மக்களைப் சேர்ப்பதற்குப் பதிலாக பிரித்து விட்ட தருணமே நிகழ்ந்துள்ளது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மேம்படுத்திக் கொண்டு சரியாக செயல்பட முயற்சிக்கிறேன் என மார்க் ஜூகர்பெர்க் வருத்தம் தெரிவித்துள்ளார்.
விளம்பரங்கள் மூலம் பேஸ்புக் தவறான மற்றும் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக உலகின் பல நாடுகளின் அரசுகள் புகார் தெரிவித்து வருகின்றன. 2016 ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது அமெரிக்க வாக்காளர்களை குறிவைத்து ரஷ்யா 3000 விளம்பரங்களை வெளியிட்டது. இது அமெரிக்க தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உலக நாடுகளின் தொடர் புகாரை அடுத்து ஜூகர்பெர்க் மன்னிப்பு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Post a Comment