
உலக வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், அதுவும் ஒரே ஆண்டில் இவ்வளவு அதிகமான தகவல்கள் திருடப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை. அதிக அளவில் டேட்டாக்கள் திருடப்பட்ட தகவல் வெளியானது யாகூ நிறுவனத்தின் சொத்துக்களின் விலைகளை குறைத்து பேசி வாங்க வெரிசோன் நிறுவனம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக யாகூ தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக யாகூ நடத்திய புதிய ஆய்வில் அனைத்து வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட்களும் ஹேக் செய்யப்பட்டு, தகவல்கள் தெரிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாஸ்வேர்டுகள் மட்டுமின்றி டெக்ஸ்ட் தகவல்கள், பேமன்ட் கார்டு டேட்டா அல்லது வங்கி கணக்கு விபரம் உள்ளிட்ட தகவல்களும் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
Post a Comment