Ads (728x90)

இந்­திய  மக­ராஷ்­டிரா மாநி­லத்தில் அமைந்­துள்ள ஆருங்­காபாத் நகரில் இன்று ஆரம்­ப­மாகும் பெளத்த கலா­சார மாநாட்டில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ விசேட உரை­யாற்­ற­வுள்ளார். மேலும் குறித்த விஜ­யத்­தின்­போது அர­சியல் தலை­வர்­க­ளு­ட­னான உத்­தி­யோ­க­பூர்வ சந்­திப்­புகள் ஏற்­பா­டா­காத போதும் தனிப்­பட்ட சந்­திப்­புகள் இடம்­பெ­றலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

சமூக மற்றும் கலா­சாரம் தொடர்­பான சர்­வ­தேச பெளத்த சம்­மே­ள­னத்தின் இரண்டாம் மாநாடு மக­ராஷ்­டிரா மாநி­லத்­தி­லுள்ள ஆருங்­காபாத் நகரில் இன்றும் நாளையும் நடை­பெ­ற­வுள்­ளது. பெளத்த மர­பு­ரி­மைகள் மற்றும் கலா­சாரம் தொடர்பில் உலகைத் தெளி­வு­ப­டுத்­து­வதே இம்­மா­நாட்டின் தொனிப்­பொ­ரு­ளாக அமைந்­துள்­ளது.

எனவே, அம்­மா­நாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ  நேற்றுக் காலை 5.30 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­னூ­டாக இந்­தியா பய­ண­மானர். அவ­ருடன் முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லொஹான ரத்­வத்த, முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் உதித்த லொக்குபண்டார உட்பட 12 பேர்கொண்ட குழுவினர் இந்தியா பயணமாகியுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget