Ads (728x90)

திரு­கோ­ண­மலை நகர்­ப­கு­தியில் வெள்ளியன்று பாவ­னை­யாளர் அலு­வல்கள் அதி­கார சபையால் முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்றி வளைப்பில் 15 பெண்கள் அழகு கலை நிலை­யங்­க­ளுக்கும்  07 வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் எதி­ராக வழக்­குகள் பதி­யப்­பட்­டுள்­ள­தாக திரு­கோ­ண­மலை பாவ­னை­யாளர் அலு­வல்கள் அதி­கார சபையின் மாவட்ட இணைப்­ப­தி­காரி  தன­சே­கரன் வசந்­த­சே­கரன் தெரி­வித்தார்.

பாவ­னை­யாளர் அலு­வல்கள் அதி­கார சபையின் சுற்றி வளைப்பில் திரு­கோ­ண­மலை நகர்ப்­ப­கு­தியில் 15 பெண்கள் அழகு படுத்தும் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக வழக்­குகள் தாக்கல் செய்ய தர­வு­களை பெற்­றுள்­ள­தா­கவும் அதில் காலா­வ­தி­யான முகப்­பூச்­சி­களை வைத்­தி­ருந்­தமை அவற்றைக் காட்­சிப்­ப­டுத்­தி­யமை  காலா­வதி மற்றும் உற்­பத்தி திகதி பொறிக்­கப்­ப­டாத கிறீம் வகைகள் பாவ­னைக்­குட்­ப­டுத்­தி­யமை போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு எதி­ராக வழக்குள் தாக்கல் செய்­ய­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

அத்­துடன் காலா­வ­தி­யான பொருட்­களை விற்­பனை செய்­தமை நிர்­ணய விலையை விட அதிக விலைக்கு விற்­பனை செய்­தமை போன்ற குற்றச்சாட்டுக்காக 07 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget