Ads (728x90)

“வடக்கு – கிழக்கு இணைப்பு நடை­பெ­றா­விட்­டால் புதிய அர­ச­மைப்பை ஏற்­க­மாட்­டோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எங்­கும் கூற­வில்லை. வடக்கு – கிழக்கு இணைக்­கப்­பட்டு, அது அர­ச­மைப்­பில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டும் என்­பது அவர்­க­ளின் நிலைப்­பாடு”

இவ்­வாறு வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­ன­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ண தெரி­வித்­தார்.
சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­மை­ய­கத்­தில் நேற்று நடை­பெற்ற செய­ல­மர்­வி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
அரச தலை­வர் தேர்­த­லின்­ போது புலம்­பெ­யர் சமூ­கத்­தி­னர் பெரும்­பா­லா­னோர் எமக்கு ஆத­ர­வ­ளித்­த­னர். புலம்­பெ­யர் சமூ­கத்­தி­னர் அனை­வ­ரும் பிரி­வி­னை­வா­தி­கள் அல்­லர். ஒரு­சி­லர் மாத்­தி­ரமே தனி­நாடு வேண்­டும் எனக் கூச்­ச­லி­டு­கின்­ற­னர்.

பெரும்­பா­லா­ன­வர்­க­ளின் விருப்­பம் ஒற்­றை­யாட்­சிக்­குள் அதி­கூ­டிய அதி­கா­ரப்­ப­கிர்வு முறை­யா­கவே இருக்­கின்­றது. புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் விட­யத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பா­னது காலத்­துக்­கேற்ற வகை­யி­லும், நடு­நி­லை­மை­யா­க­வும் செயற்­பட்­டு­ வ­ரு­கின்­றது. தமிழ் மக்­க­ளுக்­குப் பிரச்­சினை உள்­ள­தென உணர்ந்­து­கொண்ட கடந்த அர­சு­கள், அத­னைத் தீர்ப்­ப­தற்கு முயற்­சிக்­க­வில்லை. மக்­கள் போராட்­டத்­தைக் கையி­லெ­டுத்­த­னர்.

தற்­போது இந்த மக்­க­ளின் பிரச்­சினை மாத்­தி­ர­மன்றி, மனித உரி­மை­களை வலுப்­ப­டுத்தி, நீதித்­து­றையை சுயா­தீ­னப்­ப­டுத்தி, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் பாதை­யில் நாம் பய­ணிக்­கின்­றோம். இன்று சில சிங்­க­ளப் பிரி­வி­னை­வா­தி­க­ளின் செயற்­பாடு மிக­வும் கேவ­ல­மாக உள்­ளது. நாட்­டைப் பிரிப்­ப­தா­கக் கூறி நாட்­டில் மத­வா­தத்தை ஏற்­ப­டுத்தி குழப்­பம் விளை­விக்­கின்­ற­னர்.

நாடு பிரிக்­கப்­ப­ட­மாட்­டாது என்ற விட­யம் புதிய அர­ச­மைப்­பின் இடைக்­கால அறிக்­கை­யில் மிக­வும் தெளி­வா­கக் கூறப்­பட்­டுள்­ளது. ஒற்­றை­யாட்­சி­யில் அதி­யுச்ச அதி­கா­ரப் பங்­கீடு வழங்­கப்­ப­டும் என்ற விட­யம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
ஒற்­றை­யாட்சி என்ற சொல்­லுக்கு வடக்கு, கிழக்கு மக்­கள் பயப்­ப­டு­கின்­ற­னர். கடந்த காலங்­க­ளில் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­கள், இடது கையால் வழங்­கப்­பட்டு வலது கையால் மீளப் பெறப்­பட்­டன. அந்த மக்­கள் இத­னால் இப்­போ­தும் பயப்­ப­டு­கின்­ற­னர்.

தற்­போது ஒரு­மித்த நாடு என்ற பதத்தை உள்­வாங்­கி­யுள்­ளோம். அத­னை­விட ஒரு சிறந்த பதம் இருக்­கு­மா­யின் நாம் ஏற்­றுக்­கொள்­ளத் தயார்.
சகல மதங்­க­ளுக்­கும் உரிய மதிப்பு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பௌத்­தத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்ள முன்­னு­ரிமை இல்­லா­மல் போய்­வி­ட­வில்லை என்­பதை சிங்­க­ள­வர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

வடக்கு – கிழக்கு இணைப்பு நடை­பெ­றா­விட்­டால் புதிய அர­ச­மைப்பை ஏற்­க­மாட்­டோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எங்­கும் கூற­வில்லை. வடக்கு – கிழக்கு இணைக்­கப்­பட்டு, அது அர­ச­மைப்­பில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டும் என்­பது அவர்­க­ளின் நிலைப்­பாடு.

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்­பில் முன்­வைக்­கப்­பட்ட மூன்று விட­யங்­க­ளில் இது­வும் ஒன்று. வடக்கு, கிழக்கு மட்­டு­மன்றி எந்­த­வொரு மாகா­ண­மும் இணைக்­கப்­ப­டக்­கூ­டாது. அவற்­றுக்கு மேல­தி­க­மாக மூன்­றா­வ­தாக மிக முக்­கிய விட­ய­மொன்றை உள்­ள­டக்­கி­யுள்­ளோம்.

வடக்கு, கிழக்கு இணைக்­கப்­ப­ட­வேண்­டு­மா­யின் நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டம் இயற்­றப்­ப­ட­வேண்­டும். அத்­தோடு, சம்­பந்­தப்­பட்ட இரண்டு மாகாண மக்­க­ளி­ட­மும் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்­டும் – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget