Ads (728x90)

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் கூட்­டணி அமைத்து கைச் சின்­னத்தில் கள­மி­றங்­கு­வதா அல்­லது வெற்­றி­லைச் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வதா என்­பது தொடர்­பில் எதிர்­வ­ரும் 5ஆம் திக­திக்குப் பின்­னரே சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி இறுதி முடி­வெ­டுக்­கவுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் கடந்த புதன்கிழமை இரவு நடை­பெற்ற செயற்­கு­ழுக் கூட்­டத்தின் ­போதே இவ்­வாறு தீர்­மா­னிக்­கப்பட்டது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யா­னது கடந்த தேர்­தல்­க­ளின்­போது ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யாக வெற்­றிலைச் சின்­னத்­தி­லேயே தேர்­தலை எதிர்­கொண்­டது.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சுதந்­தி­ரக் கட்­சி­யின் கைசின்­னத்­தி­லேயே போட்­டி­யி­டும் என்று அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆரம்­பத்­தில் அறி­வித்­தி­ருந்­தார்.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் இந்த முடி­வுக்குப் பங்­கா­ளிக் கட்­சி­கள் சில கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருந்­தன. வெற்­றிலைச் சின்­னத்­தில் கள­மி­றங்­கி­னால்­தான் கூட்­டணி சாத்­தி­ய­மா­கும் என்­றும் சுட்­டிக் காட்­டி­யி­ருந்­தன.

அத்­து­டன், மகிந்த அணியை இணைத்­துக்­கொண்டு கள­மி­றங்­கு­வ­தாக இருந்­தா­லும் பொதுச்­சின்­ன­மொன்று அவ­சி­யம் எனச் சுட்­டிக் காட்­டப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றா­ன­தொரு பின்­பு­லத்­திலேயே எந்­தச் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வது என்­பது பற்றி ஆராயச் சுதந்­தி­ரக் கட்சி கூட­வுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget