Ads (728x90)

புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தி­யில் விடு­த­லைப் புலி­கள் புதைத்த தங்­கத்தை தேடி தென்­னி­லங்­கை­யில் இருந்து வந்து தங்­கம் தோண்­டிய 11 பேரை புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸார் நேற்றுக் கைது­செய்­துள்­ளனர்.

இவர்­கள் தோண்­டும் நட­வ­டிக்­கைக்கு முன்­னர் பூசை­வைத்து தேங்­காய் உடைத்­துள்­ளார்­கள். எனவே இவர்­க­ளுக்கு நம்­ப­க­ர­மான தக­வல் கிடைத்­தி ­ருக்­கக் கூடும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

இவர்­கள் வந்த அதி­சொ­குசு ஊர்­தி­கள் மற்­றும் தோண்­டு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயு­தங்­கள் என்­பன பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டன.
குறிப்­பிட்ட நபர்­கள் மாத்­தறை, கொழும்பு, கண்டி, கொட்­டாவ, கட­வத்த, கொட்­ட­கேன, கிறான்­பாஸ், கிளி­நொச்சி, யாழ்ப்­பா­ணம் போன்ற இடங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது.

இவர்­களை முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் முன்­னி­லைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது என்று பொலிஸார் தெரி­வித்தனர். சில வாரங்களுக்கு முன்னரும் தங்கம் தோண்டிய குற்றச்சாட்டில் தென்பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி உட்படச் சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget