Ads (728x90)

எகிப்தில்  கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட  15 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து எகிப்து அரசு தரப்பில்,  "எகிப்தில் கடந்த 2013-ம் ஆண்டு போlலீஸ் சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் 15 பேருக்கு  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதிகள் 15 பேரும் சினாயின் வடக்கு பகுதியில் தூக்கிலிடப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

எகிப்தின் சினாய் பகுதியில் கடந்த 2013 முதல் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு பாதுகாப்புப் படையினருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக உள்ள பொது மக்கள் மீதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget