Ads (728x90)

2020ஆம் ஆண்டு அரச தலை­வ­ரா­கத் தெரிவு செய்­யப்­ப­டப்­போ­வது யார்? என்று தற்­போது நாட்­டில் பிர­பல்­ய­மாக உள்ள ஐந்து பேரின் பெயர்­களை முன்­னி­லைப்­ப­டுத்­திய கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஊட­கப்­பி­ரிவு நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பில் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்த­பா­ய ராஜ­ப­க்சவே அரச தலை­வ­ரா­கத் தெரிவு செய்­யப்­ப­டு­வார் என்று அதி­க­மா­ன­வர்­கள் கூறி­யுள்­ள­னர்.

18 தொடக்­கம் 35 வய­து­வ­ரை­யான 505 பேரி­டம் நடத்­திய இந்­தக் கருத்­துக்­க­ணிப்­பில் கோத்த­பா­ய ராஜ­பக்ச, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச, மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க உள்­ளிட்ட ஐவ­ரின் பெயர்­கள் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட் டன.

இதில் 39.18 வீத­மா­ன­வர்­கள் கோத்தபா­ய ராஜ­பக்­ச­வுக்­கும், 28.64 வீத­மா­ன­வர்­கள் சஜித் பிரே­ம­தா­ஸ­ வுக்­கும், 9.18 வீத­மா­ன­வர் கள் மைத் தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், 8.64 வீத­மா­ன­வர்­கள் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வுக்­கும் வாக்­க­ளித்­துள்­ள­னர்.

நாட்­டில் செப்­ரெம்­பர் முதல் நவம்­பர் மாதம் வரை­யான காலப்­ப­கு­தி­யில் இடம்­பெற்ற அர­சி­யல் நில­மை­களை அடிப்­ப­டை­யாக கொண்டே இந்­தக் கருத்­துக்­க­ணிப்பு நடத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget