
அதன்படி 1911 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும். பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் பாடசாலை அதிபருக்கும், தனியாருக்கான அனுமதிப்பத்திரங்கள் பரீட்சார்த்திகளின் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித நேற்றுத் தெரிவித்தார்.
4 லட்சத்து 29 ஆயிரத்து 493 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 லட்சத்து 59 ஆயிரத்து 80 தனியார் பரீட்சார்த்திகளும் இந்தமுறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இதன்பிரகாரம் 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பேர் இந்தமுறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். ஜி.சி.ஈ. சாதாரணப் தரப் பரீட்சை எதிர்வரும் 12 ஆம் தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Post a Comment