
இன்று முதல் 20ம் திகதி வரை கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வேட்புமனுக்கள் இம்மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதற்கு முன்னர், வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 11ம் திகதி முதல் 14ம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment