Ads (728x90)

பிர­பா­க­ர­னிடம் மண்­டி­யி­டாத நாம் இன்­றைய அர­சி­யல்­வா­தி­க­ளி­டமா மண்­டி­யி­டப்­போ­கின்றோம்,  எந்த சவா­லையும் வெற்­றி­கொள்வோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். உண்­மை­யான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் நாங்­களே, சின்­னத்தை  விடவும் கொள்கை ரீதியில் உள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின்  முத­லா­வது தேர்தல் கூட்டம் நேற்று பது­ளையில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்.

நல்­லாட்சி வந்தால் நாடு அபி­வி­ருத்தி அடையும் எனவும் மக்­க­ளிடம் பணம் இருக்கும் எனவும் கூறி ஆட்­சிக்கு வந்­த­வர்கள் இன்று நாட்டின் பொரு­ளா­த­ரத்தில் வீழ்ச்சி உள்­ள­தாக கூறி வரு­கின்­றனர். இந்த நாட்டின் பொரு­ளா­த­ரத்தை நாம் வீழ்த்­தி­ய­தா­கவும், இந்த நாட்­டினை கடனில் ஆழ்த்­தி­யது எமது அர­சாங்கம் எனவும் கூறு­கின்­றனர். நாம் முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்கள் தான் வீழ்ச்­சிக்கு காரணம் என கூறு­கின்­றனர். ஆனால் நாம் முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்கள் அனைத்­தையும் முன்­னெ­டுக்க சரி­யான வேலைத்­திட்­டங்­களை வகுத்­தி­ருந்தோம்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து எம்மை வெளி­யேற்­றவும் நாம் ஸ்ரீலங்கா காரர்கள் இல்லை எனவும் சிலர் கூறி வரு­கின்­றனர். உண்­மை­யான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்­கா­ரர்கள் நாங்கள் தான். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி என்­பது சின்னம் அல்ல, கொள்­கையே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாகும். அது எம்­மிடம் மட்­டுமே உள்­ளது. தேசிய அர­சாங்­கத்தில் சலு­கை­க­ளுக்­காக தஞ்சம் புகிந்­துள்ள ஒரு இலர் தம்மை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் எனவும் எமது மக்­களை பாது­காக்­கவே தாம் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட்டு வரு­வ­தா­கவும் கூரு­கி­னர்னர். அவ்­வாறு என்றால் நாம் எதற்­காக உள்ளோம், எதற்­காக இந்த போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இந்த நாட்டின் மீண்டும் சரி­யான தலை­மைத்­துவம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்­கா­கவே மீண்டும் நாம் போராட ஆரம்­பித்­துள்ளோம்.

இந்த நாட்டின் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து இந்த நாட்­டினை பாது­காத்­துள்ளோம். பிர­பா­க­ரனின் அச்­சு­றுத்தல், அவர்­க­ளுக்கு இருந்த சர்­வ­தேச பலம் எதையும் கண்டு அஞ்­சாது, அவர்­க­ளிடம் மண்­டி­யி­டாத நாம் இன்றுள்ள அரசியல் வாதிகளில் வெட்டி சவால்களுக்காக அடிபணியப்போகின்றோம். இந்த அரசாங்கம் எம்மீது சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் எதையும் கண்டு நாம் அஞ்சப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget