
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் கூட்டம் நேற்று பதுளையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
நல்லாட்சி வந்தால் நாடு அபிவிருத்தி அடையும் எனவும் மக்களிடம் பணம் இருக்கும் எனவும் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டின் பொருளாதரத்தில் வீழ்ச்சி உள்ளதாக கூறி வருகின்றனர். இந்த நாட்டின் பொருளாதரத்தை நாம் வீழ்த்தியதாகவும், இந்த நாட்டினை கடனில் ஆழ்த்தியது எமது அரசாங்கம் எனவும் கூறுகின்றனர். நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தான் வீழ்ச்சிக்கு காரணம் என கூறுகின்றனர். ஆனால் நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்க சரியான வேலைத்திட்டங்களை வகுத்திருந்தோம்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து எம்மை வெளியேற்றவும் நாம் ஸ்ரீலங்கா காரர்கள் இல்லை எனவும் சிலர் கூறி வருகின்றனர். உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர்கள் நாங்கள் தான். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது சின்னம் அல்ல, கொள்கையே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும். அது எம்மிடம் மட்டுமே உள்ளது. தேசிய அரசாங்கத்தில் சலுகைகளுக்காக தஞ்சம் புகிந்துள்ள ஒரு இலர் தம்மை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எனவும் எமது மக்களை பாதுகாக்கவே தாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் கூருகினர்னர். அவ்வாறு என்றால் நாம் எதற்காக உள்ளோம், எதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இந்த நாட்டின் மீண்டும் சரியான தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காகவே மீண்டும் நாம் போராட ஆரம்பித்துள்ளோம்.
இந்த நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டினை பாதுகாத்துள்ளோம். பிரபாகரனின் அச்சுறுத்தல், அவர்களுக்கு இருந்த சர்வதேச பலம் எதையும் கண்டு அஞ்சாது, அவர்களிடம் மண்டியிடாத நாம் இன்றுள்ள அரசியல் வாதிகளில் வெட்டி சவால்களுக்காக அடிபணியப்போகின்றோம். இந்த அரசாங்கம் எம்மீது சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் எதையும் கண்டு நாம் அஞ்சப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment