Ads (728x90)

யாழ்ப்­பாணப் பல்­க­லைக் கழ­கத்­தின் 33 ஆவது பொதுப் பட்­ட­ம­ளிப்பு விழா­வின் முத­லா­வது அமர்வு நாளை 8 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை 9 மணி முதல் கைலா­ச­பதி கலை­ய­ரங்­கில் இடம்­பெ­ற­வுள்­ளது. இரண்­டா­வது அமர்வு அடுத்­தாண்டு மார்ச் மாதம் நடத்­தப்­ப­டும்.

இவ்­வாறு யாழ். பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பேரா­சி­யர் இ.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்தார்.

33ஆவது பட்­ட­ம­ளிப்பு விழா­வின் முத­லா­வது அமர்வு தொடர்­பாக நேற்று யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­தில் நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்ததாவது:-

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 33 ஆவது பொதுப் பட்­ட­ம­ளிப்பு விழா இம்­முறை இரண்டு பகு­தி­க­ளாக நடத்­தப்­ப­ட­வுள்­ளன. முத­லா­வது பகுதி எதிர்­வ­ரும் 8 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை 9 மணி முதல் 5 அமர்­வு­க­ளாக நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த பட்­ட­ம­ளிப்பு விழா­வில் உயர் பட்­டப் படிப்­பு­கள் பீடம், முகா­மைத்­துவ வணிக பீடம், கலைப்­பீட சட்­டத்­துறை, விவ­சாய பீடம், மருத்­துவ பீடத்­தின் இணை மருத்­துவ அலகு, சித்த மருத்­து­வத் துறை, வவு­னியா வளா­கத்­தின் பிர­யோக விஞ்­ஞான பீடம், வணிக கற்­கை­கள் பீடம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த 816 பட்­ட­தா­ரி­கள் பட்­டங்­க­ளைப் பெற­வுள்­ள­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget