Ads (728x90)

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 3 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் தவி­சா­ளர் பத­வி­யை­யும், ஏனைய மாவட்­டங்­க­ளில் தலா ஓர் உள்­ளூ­ராட்சி மன்­றத்­தின் தவி­சா­ளர் பத­வி­யை­யும் கோர­வுள்­ள­தாக, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுள் ஒன்­றான புளொட் அமைப்­புத் தெரி­வித்­துள்­ளது.

ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்கா­ளிக் கட்­சி­க­ளுக்கு இடை­யில் இன்று கலந்­து­ரை­யா­டல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யி­லேயே, அந்­தக் கட்­சி­யின் தலை­வர் த.சித்­தார்த்­தன் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வடக்கு மாகா­ணத்­தில் வன்­னிப் பிராந்­தி­யத்­தி­லுள்ள மாவட்­டங்­க­ளின் பங்­கீ­டு­கள் தொடர்­பில் இணக்­கப்­பாடு காணப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்சி மாவட்­டம் தொடர்­பில் மாத்­தி­ரமே இன்­னும் பேச்சு முன்­னெ­டுக்­க­ வேண்­டி­யுள்­ளது. மற்­றொரு பங்­கா­ளிக் கட்­சி­யான ரெலோ, தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் பேசி இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

நாம், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் மூன்று உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் தவி­சா­ளர் பத­வி­யைக் கோர­வுள்­ளோம். மானிப்­பாய், சங்­கானை, வலி.தெற்கு ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் தவி­சா­ளர் பத­வி­யையே பெரும்­பா­லும் கோரு­வோம். இருப்­பி­னும் சில­வே­ளை­க­ளில் இந்­தச் சபை­க­ளில் மாற்­றம் வர­லாம். ஆனால் நாம் கோரும் எண்­ணிக்­கை­யில் மாற்­றம் வராது – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget