Ads (728x90)

முஸ்­லிம்­கள் கொண்­டா­டும் மீலாத் விழா­வின் தேசிய நிகழ்வு முதன்­மு­த­லாக இந்­த­முறை யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது. அதில் கலந்­து­கொள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வ­ரும் 18ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­துக்கு வர­வுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணம் ஒஸ்­மா­னி­யாக் கல்­லூ­ரி­யில் இந்­தத் தேசிய நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது. அதற்­கான ஏற்­பா­டு­கள் இடம்­பெ­று­கின்­றன. ஏற்­பா­டு­க­ளுக்­கென முஸ்­லிம் விவ­கார அமைச்சு 14 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கி­யுள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் பாட­சா­லைச் சீர­மைப்­புக்­கென 4 மில்­லி­யன் ரூபா­வும், மைதான மின்­வி­ளக்­கு­கள் சீர­மைப்­புக்­கென 1.1 மில்­லி­யன் ரூபா­வும் ஒதுக்­கி­யுள்­ளார். வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அஸ்­மின் 3 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கி­யுள்­ளார் என்று மீலாத் விழா வழி­ந­டத்­தல் குழு­வின் பொறுப்­பா­ளர் எம்.எம்.ஜான்­சிங் தெரி­வித்­தார்.

இந்த நிகழ்­வில் எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், முஸ்­லிம் அமைச்­சர்­கள் உள்­ளிட்ட அமைச்­சர்­க­ளும், மாவட்­டத்­தின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சில­ரும் வடக்கு மாகாண ஆளு­நர், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட பல­ரும் கலந்­து­கொள்­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget