
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் இந்தத் தேசிய நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. ஏற்பாடுகளுக்கென முஸ்லிம் விவகார அமைச்சு 14 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலர் பாடசாலைச் சீரமைப்புக்கென 4 மில்லியன் ரூபாவும், மைதான மின்விளக்குகள் சீரமைப்புக்கென 1.1 மில்லியன் ரூபாவும் ஒதுக்கியுள்ளார். வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் 3 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளார் என்று மீலாத் விழா வழிநடத்தல் குழுவின் பொறுப்பாளர் எம்.எம்.ஜான்சிங் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்களும், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.
Post a Comment