
கப்பற்படை தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நேற்று கப்பற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் திறனுள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் கனவு திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இதன்மூலம் கப்பற்படையின் பலம் அதிகரிக்கும். எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமை கப்பற்படைக்கு கிடைக்கும். இவ்வாறு சுனில் லன்பா கூறினார்.
இந்திய - பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே, கடல் பகுதியில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன.
Post a Comment